உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-09-23 14:01 IST   |   Update On 2022-09-23 14:01:00 IST
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
  • 200 டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது. இதில் சுமார் 200 டிரைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை அரியலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தொடங்கி வைத்து, டிரைவர்கள் விபத்தில்லா சாலை பயணம் மேற்கொள்வதுடன், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் மதுபோதையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எடுத்துரைத்தார். இதில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து போலீசார் பலர் கலந்து கொண்டனர்"

Tags:    

Similar News