உள்ளூர் செய்திகள்

பார்வைத்திறன்-செவித்தின் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன்

Published On 2022-11-21 12:24 IST   |   Update On 2022-11-21 12:24:00 IST
  • பார்வைத்திறன்-செவித்தின் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது
  • தேர்வு முகாம் அரியலூரில் 25-ந்தேதி நடக்கிறது.

அரியலூர்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் பட்டய படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயத்தொழில் புரியும், தனியார்துறையில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணி சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் பதிவிற்கான சான்று), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2 ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண்:17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228840 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News