உள்ளூர் செய்திகள்

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

Published On 2023-02-17 07:09 GMT   |   Update On 2023-02-17 07:09 GMT
  • நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.

அரியலூர்:

ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை வழங்க கோரி அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர்(பொ)தமயந்தி, மதியத்துக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.


Tags:    

Similar News