உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-10 12:46 IST   |   Update On 2023-03-10 12:46:00 IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்தது

அரியலூர்

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மீதும், கட்சி அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News