தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்ப பெற வேண்டும்.நவீன அரிசி ஆலைகளை தனியார்மயமாக்கக் கூடாது. ஒப்பந்த மூலம் சுமைத் தூக்குவோரை நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுமைதூக்குவோருக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மண்டல தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மண்டல செயலர் அய்யாதுரை, பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர்கள் சசிக்குமார், பாலன், முனியமுத்து, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர்.