உள்ளூர் செய்திகள்
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
அரியலூர்,
மணிப்பூர் கலவரத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே இந்திய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவர சம்பவங்களை தடுக்க தவறிய அம்மாநில பா.ஜ.க. ஆட்சியை கலைத்திட வேண்டும். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், பாலியல் வன்முறை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.ஆறுமுகம், ப.கலியபெருமாள், மு.கனகராஜ் மற்றும் ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.