உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

Published On 2023-05-16 12:14 IST   |   Update On 2023-05-16 12:14:00 IST
  • அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
  • அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அரியலூர்:

அரியலூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் கண்டனம் தெரிவித்து பேசினார். 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமுல்படுத்திட வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News