- தமிழக பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று எதிர்ப்பு
திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அலுவலகத்தின் அரசு ஊழியர்கள், தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான பழைய ஓய்வுதி திட்டம், நிலுவைத் தொகை, சரண்டர் தொகை போன்றவற்றில் எந்த கோரிக்கைகளையும் அறிவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையேற்று அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தி உடனடியாக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தமிழக பட்ஜெட் மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்