செந்துறை அருகே கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
- செந்துறை அருகே கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்
- இவர் மீது ஏற்கனவே குவாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் பால்ராஜ்(வயது48). கடந்த மாதம் இவர் உடையார்பாளையம் சாலை திரௌபதி அம்மன் கோயில் செல்லும் வழியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான காவல் துறையினர் பால்ராஜை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 1,100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே குவாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை அடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இைதயைடுத்து பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.