உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-25 05:58 GMT   |   Update On 2023-11-25 05:58 GMT
அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,  

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரிக்கும், படைப்புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதில் மக்காச்சோள பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட முந்திரி, மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News