உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மின் ஒயர் - பணம் திருட்டு

Published On 2023-07-30 12:42 IST   |   Update On 2023-07-30 12:42:00 IST
  • அரியலூரில் மர்ம நபர்கள் மின் ஒயர் - பணத்தை திருடி சென்று உள்ளனர்
  • திருமானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 65). இவருக்கு சொந்தமான வயல் அதே பகுதியில் உள்ளது. வயலில் உள்ள மின் மோட்டார் அறையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மதிப்பிலான ஒயர்களை திருடிச்சென்றனர். இதேபோல் அருகே இருந்த ஆனந்த்(40), லோகநாதன்(30) ஆகியோருக்கு சொந்தமான அடுத்தடுத்த மோட்டார் அறைகளிலும் தலா ரூ.5,000 மதிப்பிலான ஒயர்களையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News