உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-14 09:44 IST   |   Update On 2023-03-14 09:44:00 IST
  • பதவி உயர்வு, பணி நெருக்கடி குறைத்திட கோரி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஊரக வளர்ச்சி துறையில் பணி நெருக்கடிகளை குறைக்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கணி இயக்குபவர்களுக்கான பணி நிரந்தர அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.ஜெயராஜ் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பஞ்சாபிகேசன், மாவட்டச் செயலர் சண்முகம், மாவட்ட பொருளாளர் டி.என். முருகானந்தம், நிர்வாகி ஷேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags:    

Similar News