உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-10-01 14:42 IST   |   Update On 2022-10-01 14:42:00 IST
  • கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவரின் மகன் முத்துக்குமார்(வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் சம்பவதன்று கல்லூரி செல்லாமல் இருந்ததால் அவரது தந்தை முத்துக்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News