- அரியலூரில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
- 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில், நகராட்சி கமிஷனர் பொறுப்பு தமயந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, மகாலட்சுமி, இன்பவள்ளி, முகமதுஇஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி, ராஜேஷ், புகழேந்தி, ராஜேந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இளநிலை உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார், இதை தொடர்ந்து அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டிஏரி முதல் சித்தேரி வரை உள்ள வாய்க்கால்களை தூர் வாருவது, அரியலூர் வார சந்தையில் உள்ள நுண்ணிய கலவை உரக்கிடங்கில் கசிவு நீர் தொட்டி அமைப்பது, திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்பட்டு கீழப்பழுவூரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பிரதான கழிவு நீர் குழாய் மற்றும் மருதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரதான கழிவு நீர் குழாயினை தாங்கும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்வது என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.