உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

Published On 2023-05-12 10:58 IST   |   Update On 2023-05-12 10:58:00 IST
  • கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது இரண்டாவது மகள் அனுஷா (வயது 18). இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோடங்குடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சம்பவத்தன்று வீட்டிலிருந்து சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் அனுஷா கிடைக்காததால், தா பழூர் போலீசில் மதியழகன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News