உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட மாநாடு

Published On 2022-09-30 07:18 GMT   |   Update On 2022-09-30 07:18 GMT
  • கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட மாநாடு நடந்தது
  • பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டட தொழிலாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார், முன்னால் சிபிஐ ஒன்றியசெயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார். ராதாகிருஷ்ணன், ராஜு, சங்கர், பானு, ஜோதி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் தண்டபாணி சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார், கரும்பாயிரம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், மாநிலதுணை பொதுசெயலாளர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார். விவாதபொருப்புரைபுதியநிர்வாகிகள்தேர்வுகோரிக்கை விளக்கவுரை மாவட்ட செயலாளர் ஜீவா வாசித்தார்,

நிகழ்ச்சியில் பெண்கள் கட்டுமான அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர் நந்தினி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், வாழ்த்துரை நிகழ்த்தினர், மாநாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக அனைத்து தொழில்களும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு துறைகளில் திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் இதர அனைத்து தொழிலாளர்களுக்கும் 90 சதவீதம் வேலைகளை ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

மகப்பேறு கால சட்டப்படி பெண்கள் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் பிரசவகால உதவியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News