உள்ளூர் செய்திகள்
அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செவித் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் பேசினர். தொடர்ந்து அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு செவித்திறனை பரிசோதனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா ஆகியோர் செய்திருந்தனர்.