உள்ளூர் செய்திகள்
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
- மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடந்தது
- காவல் துறை சார்பில் நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையம் முன்பு மது விலக்கு ஆயத்தீர்வை துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. கலால் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதே போல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பேருந்து நிலையம் , மற்றும் அண்ணாநகர் பிரிவு சாலையில் நடைப்பெற்றது.