உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் - சுற்றுலா சார்ந்த தொழில் செய்வோர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
- சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்குபவர் , பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆப்ரேட்டர் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். அப்படி முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.