உள்ளூர் செய்திகள்

வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

Published On 2023-05-09 11:34 IST   |   Update On 2023-05-09 11:34:00 IST
  • வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
  • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் தனது மகளுடன் குடியிருந்து வருகிறார். இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டின் அருகே இருந்த கல்யாண முருங்கை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவற்றின் சிறு பகுதியும், வீட்டின் மேல் இருந்த ஓடுகளும் உடைந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த மோகன்தாஸ் மற்றும் அவரது மகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Tags:    

Similar News