உள்ளூர் செய்திகள்

6 ஆயிரம் தேசிய கொடிகளை வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள்

Published On 2023-08-15 08:12 GMT   |   Update On 2023-08-15 08:12 GMT
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 6 ஆயிரம் தேசிய கொடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கினர்
  • 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

செந்துறை

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படைவீரர்கள் வீரமங்கையர்கள் அமைப்பு மற்றும் சோழப் பேரரசின் போர் வீரர்கள் சார்பாக 6000 தேசிய கொடிகள் செந்துறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் மாநில துணை தலைவர் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் வேணு நிர்வாகிகள் கல்யாண சுந்தரம் ஆசைத்தம்பி முருகன் தமிழரசன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6000 தேசிய கொடிகளை வழங்கினர். இந்திய நாட்டை காக்க எல்லையில் நின்று போராடிய முன்னாள் ராணுவ வீரர்கள் பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றையும் தேசப் பாதுகாப்பு ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாணவர்களும் தங்களது இதயத்தில் தேசிய கொடியை அணிந்து இந்திய தேசத்தை வருங்கால தலைமுறை மாணவர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தேசிய கொடியை பள்ளிகள் தோரும் சென்று வழங்கியதை ஆசியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News