உள்ளூர் செய்திகள்
- 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
- கல்லுாரி முதல்வர் வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக வளாக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அப்போது பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன அழைப்பு கடித்தை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் ம.ராசமூர்த்தி செய்திருந்தார்.