உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது

Published On 2022-10-10 14:34 IST   |   Update On 2022-10-10 14:34:00 IST
  • மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரபாகரன். இவருக்கு சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதநாதனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு தகவல் அறிந்து உடனே சாத்தம்பாடி பகுதிக்குச் சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 3 மாட்டு வண்டிகளை சாத்தம்பாடி திரவுபதி அம்மன் கோவில் அருகே மறித்து சோதனை செய்தனர். அப்போது 3 மாட்டு வண்டிகளிலும், அரசு அனுமதி இன்றி முத்துவாஞ்சேரி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, சாத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சிவசுப்பிரமணியன்(வயது 48), சின்னதுரை(47), கதிரேசன்(38) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News