உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

Published On 2022-12-26 15:12 IST   |   Update On 2022-12-26 15:12:00 IST
  • ரூ. 3 லட்சம் மதிப்பிலான பைக்குகள் பறிமுதல்
  • இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மகிமைபுரம் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் விசாரணையில் அவர் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 26) என்பதும், அவர் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவரது நண்பரான மதனத்தூர் காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரிய வந்தது.இதனையடுத்து ராஜ்குமார், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.




Tags:    

Similar News