உள்ளூர் செய்திகள்

கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-28 09:50 GMT   |   Update On 2023-08-28 09:50 GMT
  • ஒரு மாத பயிற்சி பெற மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாக ராஜன் தெரிவித்துள்ளா.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தில் நெட்டி வேலைப்பாடு மற்றும் தலையாட்டி பொம்மை செய்தல் தொடா்பாக ஒரு மாத காலப் பயிற்சி பெற மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

இதில், மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News