உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-07-05 09:40 GMT   |   Update On 2023-07-05 09:40 GMT
  • காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர் / திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613010.மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான காலி பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வு குழு வாயிலாக எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் ( 75 மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு ) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம் பெறுவார்கள். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News