உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2023-08-17 09:08 GMT   |   Update On 2023-08-17 09:08 GMT
  • கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
  • மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

கடலூர் :

வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர்ராமமூர்த்தி (வயது 29). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்தசெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா விற்கும்திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்த தால் கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்ஆத்திர மடைந்த சந்தியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்வீடான செம்மங்குப் பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி சந்தியாவை தேடி சந்தியாவின் தங்கை வீடான விருத்தாச்சலத்திற்கு அடுத்த கொம்பாடிகுப்பத்திற்கு சென்று ராமமூர்த்தி சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியாவின் தங்கை யுடைய கொழுந்தனார் கொம்பாடிகுப்பம் அருண் குமார் (வயது 24) ராமமூர்த்தியின் கைகளைக் கட்டி போட்டு காரில் செம்மங்குப் பத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்ட ராமமூர்த்தியை அவரது மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியா,மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தியாவின் தங்கையுடைய கொழுந்தனார் கொம்பாடி குப்பம் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News