- கூட்டத்திற்கு கிராமமக்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் சமூக நல திட்ட தாசில்தார் ரமேஷ், மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆனந்தராஜ், தோட்ட கலை துறை உதவி அலுவலர் கார்த்திக், கூட்டுறவுத்துறை சார்பாதிவாளர் முத்துராஜா, வறுமை கோட்டு திட்ட அலுவலர் சியாமளா, மகளிர் சுய உதவி குழுவினர், கிராம மக்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் 6 மனுக்கள் மட்டுமே அளித்தனர். அதற்கு தீர்வுகாண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது. கூட்டத்தில் மாற்று திறனாளிக்கு சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் வழங்கினார். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.