உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர்

Published On 2023-09-12 09:41 GMT   |   Update On 2023-09-12 09:41 GMT
  • காடாம்புலியூர் போலீசார் விசாரணை
  • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பண்ருட்டிக்கு வந்தார்? எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News