உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி பலி

Published On 2023-06-23 15:15 IST   |   Update On 2023-06-23 15:15:00 IST
  • சிதம்பரம் அருகே சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
  • மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

சிதம்பரம் அருகே மருதூர் பகுதியை சேர்ந்தவர் யசோதா மூதாட்டி. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதனால் மூதாட்டி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி யசோதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News