உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வீட்டை விட்டு சென்ற முதியவர் மாயம்

Published On 2022-11-01 09:34 GMT   |   Update On 2022-11-01 09:34 GMT
  • கடலூர் அருகே வீட்டை விட்டு சென்ற முதியவர் மாயமானார்.
  • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செல்வராஜை பல்வேறு இடங்களில் தேடினர்.

கடலூர்:

கடலூர் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 54) இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிந்து செல்வராஜ் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News