உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூரில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
- கார் மோதி தூக்கி வீசியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63 ) விவசாய கூலி தொழிலாளி இவர் நேற்று சைக்கிளில் அரசூர் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை மாமந்தூர் வருவதற்காக. அரசூர் வங்கி எதிரே சைக்கிளை தள்ளி கொண்டு ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதி தூக்கி வீசிதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
அவரை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்