உள்ளூர் செய்திகள்

திருச்சியில் அ.ம.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2023-11-04 15:20 IST   |   Update On 2023-11-04 15:20:00 IST
  • அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
  • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார்.

திருச்சி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, செந்தமிழன், சண்முகவேல், மாணிக்கராஜா, அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் ராஜசேகரன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.கே. செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி, அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரிவு செயலாளர்கள் பார்த்திபன், குமரேசன் உள்ளிட்ட அமைப்புச் செயலாளர்கள், 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காசி மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், பாசறை ஜான் கென்னடி, ஒன்றிய செயலாளர் சண்முகம், பெஸ்ட் கே பாபு, சிறுபான்மை பிரிவு பகுருதீன், பகுதி செயலாளர்கள் செல்வம் என்ற பன்னீர் பாண்டியன், வேதாத்ரி நகர் பாலு, நாகநாதர் சிவக்குமார், வெங்கட்ரமணி, சதீஸ்குமார்,தனசிங் மதியழகன், தருண், மீரான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News