நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்
- அ.ம.மு.க. சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து வண்ணார்ப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் குமரேசன் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், அதனை ரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஆவின் அண்ணாச்சாமி, வக்கீல்பிரிவு இணை செயலாளர் பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் பாஸ்கர் சகாயம், மாவட்ட பொருளாளர்கள் பாளை ரமேஷ், ஆசீர், பொதுக்குழு உறுப்பினர்கள் மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், பொன்னுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்கள் துரைராஜ், வேலாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.