உள்ளூர் செய்திகள்
மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி-ஆலங்குளம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
- மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான சிலம்ப போட்டிகள் தென்காசியில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 9 மாணவ -மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
அதில் முதலிடத்தில் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி, 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர்குமார், 8-ம் வகுப்பு மாணவன் ராகுல் ராகவன், 2-ம் இடத்தில் 6-ம் வகுப்பு மாணவன் சங்கர் சர்மா, 7-ம் வகுப்பு மாணவன் யோகேஷ், மாணவி பிரவீணா, 3-ம் இடத்தில் 9-ம் வகுப்பு மாணவன் நரேஷ் ஆகிய மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றோருக்கு சிலம்பம் கிரான்ட் மாஸ்டர் அருணாசலம் பரிசுகள் வழங்கினார். மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.