உள்ளூர் செய்திகள்

வெளிமாநிலத்தை சேர்ந்தவரிடம் 12 லட்சம் மோசடி

Published On 2023-11-08 06:52 GMT   |   Update On 2023-11-08 06:52 GMT
  • அரியலூரில்வெளிமாநிலத்தை சேர்ந்தவரிடம் 12 லட்சம் மோசடி
  • மோசடி நிறுவனத்தின் ரூ.78 லட்சம் முடக்கம்

செந்துறை,  

அரியலூர் மாவட்டம், ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர் (வயது 35). இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூபாய் 12,47,000/-பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டார் . இத குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இணைய வழி கொள்ளை யர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78,54,056/-முடக்கம் செய்தனர் . வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் வாணி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதில் போதிய லாபம் கிடைக்கா ததால், ஆன்லைனில் டெலிகிராம் மூலம் அறிமுக மான மகாராஷ்டிராவை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சில நபர்களை வேலைக்கு சேர்த்ததாகவும், அந்த நபர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை துவங்கி மோசடி பண பரிவர்த்தனை களுக்கு பயன்படுத்தியதாக தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாலிக் இடமிருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்-04, சிம்கார்டுகள்-15, ஏடிஎம் கார்டுகள்-08, காசோலை புத்தகம் - 01, இருசக்கர வாகனம்-01 மற்றும் ரொக்கம் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தலைமையாக செயல்பட்டுள்ள மும்பை குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News