உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்த காட்சி.

அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டும்-நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் அறிக்கை

Published On 2022-06-21 10:00 GMT   |   Update On 2022-06-21 10:00 GMT
  • அ.தி.மு.க.வில் கடைசி தொண்டனுக்கும் கட்சி முதலிடம் கொடுக்கும் என்று எடப்பாடியார் மூலம் மக்கள் தெரிந்து கொண்டனர்.
  • ஒற்றை தலைமையே அ.தி.மு.க.வின் இனிவரும் காலங்களில் வெற்றி தலைமையாக அமையும்.

பணகுடி:

நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த தீய சக்தியாலும் அழிக்க, அசைக்க முடியாது. கடந்த 4 வருட ஆட்சியே இதற்கு சாட்சி. எடப்பாடியார் ஏழை, எளிய மக்களின் இதயத்தில் வாழ்ந்து வருபவர். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டனுக்கும் கட்சி முதலிடம் கொடுக்கும் என்று எடப்பாடியார் மூலம் மக்கள் தெரிந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிப்படி அ.தி.மு.க.வை எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். ஒரு கொடியில் தான் இரட்டை இலை மலர்கிறது. அதேபோல என்றும் தமிழகத்தில் எடப்பாடிதான் இரட்டை இலையை வெற்றி இலையாக வழிநடத்தி செல்ல அவர் ஒருவரே ஆவார். ஆகவே ஒற்றை தலைமையே அ.தி.மு.க.வின் இனிவரும் காலங்களில் வெற்றி தலைமையாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News