உள்ளூர் செய்திகள்

அதிமுக தலைமையகம்

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அ.தி.மு.க. அறிவிப்பு

Published On 2022-06-26 15:36 GMT   |   Update On 2022-06-26 15:36 GMT
  • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
  • அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News