உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

Published On 2023-03-26 14:34 IST   |   Update On 2023-03-26 14:34:00 IST
  • சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
  • இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி அமிர்தம். இவரது மகன் கிருபாகரன் (வயது 35). இவர், பிளஸ்- 2 வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். ஒரு விபத்தில் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News