மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றதையும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்- நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
- விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் 20-ந் தேதி மதுரை வலையங்குளம் எழுச்சி மாநாடு திடலில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே. சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே.செல்வ ராஜ், அந்தோணி அமல ராஜா, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொரு ளாளர் காளிதாஸ் பாண்டி யன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பகுதி மாணவரணி செய லாளர் ஜெய்சன் புஷ்பராஜ் , பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 20-ந்தேதி தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடத்த உள்ள ஆர்ப்பாட்டம், மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.