உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் பலி
- மூலக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்கு மார் (வயது 60). இவர் மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க பேரூர் செயலாளராக இருந்து வந்தார்.
- இவர் கடந்த மாதம் 13-ந் தேதி அங்குள்ள அரசனார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்கு மார் (வயது 60). இவர் மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க பேரூர் செயலாளராக இருந்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 13-ந் தேதி அங்குள்ள அரசனார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அசோக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.