உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2022-08-18 09:14 GMT   |   Update On 2022-08-18 09:14 GMT
  • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களது ஒப்புதலுடன் இரட்டிப்பு ஊதியம் அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • மொத்தம் 64 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தனபாலன் வெளியி ட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சாவூா் மாவட்ட த்தில் உள்ள கடைகள், நிறுவ னங்கள், உணவு நிறுவனங்கள், போக்கு வரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான சுதந்திரதினத்தன்று (ஆகஸ்ட்15) தொழிலாளா்க ளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களது ஒப்புதலுடன் இரட்டிப்பு ஊதியம், மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.

இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவன ங்களில் 38 முரண்பா டுக ளும், உணவு நிறுவன ங்களில் 25 முர ண்பாடுகளும், மோட்டாா் போக்கு வரத்து நிறுவ னத்தில் ஒரு முரண்பாடும் என மொத்தம் 64 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News