உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 30 நிமிடத்தில் 108 யோகாசனம் செய்து சாதனை

Published On 2023-06-21 12:50 IST   |   Update On 2023-06-21 12:50:00 IST
  • திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
  • யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவள்ளூர்:

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று (21-ந்தேதி) கடைபிடிக்கபடுகிறது.

இதையொட்டி திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 3 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 49 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 30 நிமிடத்தில் 108 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர். சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகா செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

இதில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர். யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News