உள்ளூர் செய்திகள்

காரமடையில் குண்டர் சட்டத்தில் கொலை குற்றவாளி கைது

Published On 2022-12-23 09:54 GMT   |   Update On 2022-12-23 09:54 GMT
  • 9-ந் தேதி நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார்.
  • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே கெம்மாரம்பாளையம் கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இதே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்ஜித்குமார்(33). இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அய்யாசாமியை தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார். இதுதொடர்பாக அவரது உறவினர் காரமடை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் ரஞ்ஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து காரமடை போலீசார் இவர் மீது பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாக செயல்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News