உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க கோரி மனு

Published On 2023-01-12 16:26 IST   |   Update On 2023-01-12 16:26:00 IST
  • தொழிலாளர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர்.
  • தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், பொதுநலசங்க நீலகிரி மாவட்ட தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான நொண்டிமேடு கார்த்திக் கட்டிட தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கினார். பணியின் போது மரணம் அடையும் மற்றும் விபத்தில் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பிட்டு தொகை வழங்க வேண்டும். மற்றும் நடமாடும் கட்டுமானம் மருத்துவ ஊர்தி முறையாக செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 2-வது முறையாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவராக பொறுப்பேற்று உள்ள பொன்குமாருக்கு வாழ்த்துக்களை கூறி மனுவை வழங்கினார். மேலும் இ சேவை மையம் உருவாக்கி அதில் முறையான கட்டிட தொழிலாளர்கள் அனைவரும் அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் இடம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர். நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிறது. எனவே தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News