உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே: விபத்து தொழிலாளி படுகாயம்

Published On 2023-11-06 09:36 GMT   |   Update On 2023-11-06 09:36 GMT
சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கிளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கி ளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

அங்கிருந்தோர், பாலகிருஷ்ணனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாலகிருஷ்ணனின் மகன் மணிபாலன், காரைக்கால் போக்குவரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News