உள்ளூர் செய்திகள்

நாகூர் காங்கேயர் சித்தர் பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை

Published On 2022-08-13 10:24 GMT   |   Update On 2022-08-13 10:24 GMT
  • மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
  • கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.

நாகப்பட்டினம்:

நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.

தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.

மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News