உள்ளூர் செய்திகள்

நெல்லை பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு 6 லட்சத்தை தாண்டியது

Published On 2022-12-27 09:31 GMT   |   Update On 2022-12-27 09:31 GMT
  • இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும்
  • வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

நெல்லை:

நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 , கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862, விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89480, குடிசை மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 7867 என மொத்தம் 11,57,465 உள்ளது.

இதில் இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும். இது சுமார் 52.05 சதவீதம்.

வருகிற 31-தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பழைய பேட்டை பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை உதவி மின் பொறியாளர் அருணன் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News