உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வழிமறித்து தங்க வளையல், செல்போன் பறிப்பு வாலிபர் கைது

Published On 2023-09-07 06:31 GMT   |   Update On 2023-09-07 06:31 GMT
  • செங்கல் சூளை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • இளங்கோ என்பது தெரியவந்தது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தேஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 32). இவர் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வரலட்சுமியை வழிமறித்து நகை, பணத்தை தருமாறு மிரட்டினார். உடனே சுதாரித்து கொண்ட வரலட்சுமி அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து ஓடிவந்து அவரை மடக்கிய மர்ம நபர் அவரிடமிருந்த தங்க வளையல், செல்போனை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வரலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். 

புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து வரலட்சுமியை வழிமறித்து தங்க வளையல், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்த நிலையில் வரலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போன் சிக்னல் மூலம் தேடியபோது திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது வரலட்சுமியிடம் சென்போன் மற்றும் தங்க வளையலை திருடியதை ஒப்பு கொண்டார். உடனே இளங்கோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க வளையல், செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News