திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியை சேர்ந்த வர் கமலஹாசன். இவர் தனது மோட்டார் சைக்கி ளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காணாமல் போன மோட்டார் சைக்கிளை கமலஹாசன் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இவரது வீட்டின் அருகே பக்கத்து வீட்டில் உள்ள பழனி கமலஹாசன் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறினர். இதுகுறித்து கமலஹாசன் ரோஷனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.
இந்நிலையில் பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோசனை போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பழனியை மடக்கி விசாரித்தபோது முன்விரோத தகராறு காரணமாக கமலஹாசனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். உடனே அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் பழனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.